follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP1சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு : சிலிண்டருக்கு தட்டுப்பாடு

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு : சிலிண்டருக்கு தட்டுப்பாடு

Published on

நாட்டில் தற்பொழுது சமையல் எரிவாயுவுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால் எரிவாயு சிலிண்டரின் விலை 2500 ரூபா முதல் 3500 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக நுகர்வோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதோடு, இவ்வாறு விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுவதன் பின்னணியிலும் பெரும்பாலான இடங்களில் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக அறியமுடிகிறது.

இதேவேளை, லிட்ரோ எரிவாயு அடங்கிய கொள்கலன் கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், விரைவில் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலை நீங்கும் எனவும் லிட்ரோ நிறுவனத் தலைவர் தேஷர ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறைந்த விலைக்கு எரிவாயு விற்பனை செய்யக்கூடிய சாத்தியங்கள் இருந்தும் நிதி அமைச்சின் தலையீட்டுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையினால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய நேரிட்டுள்ளது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் நலின் சமந்த தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் ஒரு மெற்றிக் தொன் எடையுடைய எரிவாயு 600 டொலருக்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஓமான் டிரேடின் என்னும் நிறுவனத்திடம் கையொப்பம் செய்துகொண்டமையால் 800 டொலருக்கு கொள்வனவு செய்யவேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...

இன்று மழையுடன் கூடிய காலநிலை

இன்று (12) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...