follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉலகம்பாலஸ்தீன நாடு அமையாவிட்டால் இஸ்ரேலை அங்கீகரிக்க முடியாது

பாலஸ்தீன நாடு அமையாவிட்டால் இஸ்ரேலை அங்கீகரிக்க முடியாது

Published on

தனி பாலஸ்தீன நாடு அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்க மாட்டோம் என்று சவுதி அரேபியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் முதல் காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் தனி பாலஸ்தீன தேசம் அமைவதை ஏற்க முடியாது என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதைத் தொடா்ந்து இதற்கு சவுதி அரேபியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தனி பாலஸ்தீனம் அமைவதற்கான நம்பிக்கையை அளிக்கக்கூடிய, பழைய நிலைக்கு மீண்டும் திரும்ப முடியாத நகா்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது மிக அவசியம் எனவும் அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், இஸ்ரேலுடன் தூதரக உறவை சகஜமாக்குவதற்கான பேச்சுவாா்த்தை மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் சவுதி இளவரசரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான ஃபைசல் பின் ஃபா்ஹான் அல் சவுத் , CNN தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் கூறியுள்ளார்.

போருக்குப் பிந்தைய காஸாவின் மீள் கட்டுமான பணிகளுக்கு சவுதி அரேபியா உதவிகளைச் செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீன பகுதியில் நீண்ட காலமாக குடியேறி வந்த யூதா்கள், இஸ்ரேல் உருவாக்கத்தை 1948-ஆம் ஆண்டு பிரகடனம் செய்தாா்கள். அதனை ஐ.நா. அங்கீகரித்தது. இருந்தாலும், இதனை பாலஸ்தீன தேசியவாத அமைப்புகளும், ஏராளமான முஸ்லிம் நாடுகளும் அங்கீகரிக்கவில்லை.

இஸ்ரேலும், பாலஸ்தீனா்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தனி பாலஸ்தீன நாடாக அங்கீகரிக்க மறுத்து வருகிறது.

இந்த சூழலில், ஒரு தனி பாலஸ்தீன நாட்டுக்கு இஸ்ரேலும், இஸ்ரேலுக்கு எதிா்த் தரப்பினரும் அங்கீகாரம் வழங்கி இரண்டும் தனித் தனி சுதந்திர நாடுகளாக செயல்படுவதே பாலஸ்தீன பிரச்னைக்கு நிரந்தர தீா்வு என்று பல நாடுகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிபந்தனையுடன் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் பிரதமர்

பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. கடந்த மே 10 ஆம் திகதி...

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம்...

நியூசிலாந்து பாராளுமன்றில் பழங்குடியின எம்.பிக்கள் 3 பேரை இடைநீக்க பரிந்துரை

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் பழங்குடியின பாராளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2024-ம்...