follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP1தடையுத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு : நாளை திட்டமிட்டபடி போராட்டம்

தடையுத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு : நாளை திட்டமிட்டபடி போராட்டம்

Published on

ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிசார்  முன்வைத்த கோரிக்கையை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கொழும்பில் நாளை(16) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியினர் தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கமைய, குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்குமாறு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு பொலிசார் வாழைத்தோட்டம்  நீதிமன்றிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர்.

எனினும், குறித்த கோரிக்கையை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் இன்று(15) நிராகரித்தது.

இதேவேளை, திட்டமிட்டவாறு நாளைய தினம் போராட்டம் நடைபெறும் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு – இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்பு

தென் கொரியாவின் E-8 வீசா (பருவகாலத் தொழிலாளர் திட்டம்) கீழ் இலங்கை தொழிலாளர்களை ஈடுபடுத்தும் முன்னோடித் திட்டத்திற்கு 2025...

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நேரங்களில் மழை...

14 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் ‘ Sri Lanka Expo – 2026’

இலங்கை எக்ஸ்போ கண்காட்சி 2026 தேசிய வைபவமாக ஏற்பாடுகளைச் செய்வதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள்...