follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க பல எதிர்க்கட்சிகள் தயார்

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க பல எதிர்க்கட்சிகள் தயார்

Published on

சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க பல எதிர்க்கட்சி அரசியல் குழுக்களும் இணக்கம் தெரிவித்துள்ளன.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக ‘சுதந்திர மக்கள் சபை’ அறிவித்துள்ளது.

தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதாக சுதந்திர மக்கள் சபையின் மூத்த பிரதிநிதி பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்திருந்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றியடையச் செய்வதற்கு எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என ஜி.எல். பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.

இணையத்தள பாதுகாப்பு சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டமை முற்றிலும் தவறானது எனவும் அதனால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில், இது குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர், அரசியல் சாசனத்துக்கும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் எதிராக இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான சட்டங்கள் அமுலாக்கப்படும்

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். தற்போதுள்ள...

சட்டவிரோதமாக உர மோசடியில் ஈடுபட்ட 12 பேர் கைது

பொலன்னறுவையில் மோசடி உரவிற்பனையில் ஈடுபட்ட 12 பேர் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலன்னறுவை ஶ்ரீபுர பிரதேசத்தில் இந்தச்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் இன்று

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...