follow the truth

follow the truth

May, 6, 2025
Homeவிளையாட்டு'நுவான் துஷார உலகக் கிண்ண அணியில் நிரந்தர வீரராக இருக்க வேண்டும்'

‘நுவான் துஷார உலகக் கிண்ண அணியில் நிரந்தர வீரராக இருக்க வேண்டும்’

Published on

சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 போட்டியில் நுவான் துஷாரவின் சிறப்பான ஆட்டத்தினால் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை 2-1 என கைப்பற்றிய நிலயில், உலகக் கிண்ண அணியில் நுவான் துஷார நிரந்தரமாக அணியில் இருக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் தலைவர் லசித் மாலிங்க சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.

“அந்தப் போட்டியில் நுவான் பந்துவீசிய விதம் சிறப்பாக இருந்தது. வரும் உலகக் கிண்ணத்தில் கண்டிப்பாக அணியில் நிரந்தர இடம் பெற வேண்டும். புதிய பந்தில் துஷார நல்ல ஸ்விங் எடுக்க முடியும், பழைய பந்தில் மதீஷவுக்கு சிறப்பாக யோகர் பந்து வீச முடியும். இருவரையும் நம்புகிறேன். அவர்கள் அடுத்த உலகக் கிண்ண அணியில் உள்வாங்கப்பட வேண்டும்.

இந்தப் போட்டியில் நுவான் துஷார மூன்று விக்கெட்டுகளுடன் (ஹாட்ரிக் வாய்ப்பு) 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நுவான் துஷாரவின் மூன்று விக்கெட்டுகளுடன், ஐந்து இலங்கை வீரர்கள் சர்வதேச இருபதுக்கு 20 களத்தில் ஆறு சந்தர்ப்பங்களில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். திசர பெரேரா, வனிந்து ஹசரங்க, அகில தனஞ்சய மற்றும் லசித் மலிங்க ஆகியோர் இலங்கைக்காக மூன்று T20 விக்கெட்டுகளை வீழ்த்திய முந்தைய வீரர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் மலிங்கவால் இரண்டு முறை தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் அணி

பங்களாதேஷ் ஆண்கள் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்...

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...