follow the truth

follow the truth

May, 1, 2025
Homeஉள்நாடுமிளகாய் உட்பட பல வகையான விதைகள் ஏற்றுமதிக்கு

மிளகாய் உட்பட பல வகையான விதைகள் ஏற்றுமதிக்கு

Published on

முதன்முறையாக, இந்த நாட்டில் பல வகையான விதைகள் ஏற்றுமதிக்கு தயார் செய்யப்பட்டுள்ளன.

மிளகாய், கத்தரிக்காய், கறி மிளகாய், வெண்டைக்காய், சோளம் போன்ற சில இனங்கள் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டு, இந்த விதைகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல வெளிநாடுகளில் இருந்தும் அந்த விதைகளுக்கு அதிக கிராக்கி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயத்துறை வல்லுனர்கள் மூலம் விதைகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், அந்த விதைகளை மேம்படுத்துதல் மற்றும் பதப்படுத்துதல் ஆகியவை இலங்கையின் தனியார் துறையினரால் அதியுயர் தொழில்நுட்பம் மற்றும் நிபுணர்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை பயன்படுத்தும் சேவை தாமதம்

அதிவேக நெடுஞ்சாலைகளில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ்...

ஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தி

இலங்கையின் உழைக்கும் மக்கள் உட்பட பொது மக்கள், இந்த முறை இந்நாட்டின் ஊழல் மிக்க, சிறப்புரிமை அரசியலை முடிவுக்குக்...