follow the truth

follow the truth

May, 17, 2024
HomeTOP1பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் இன்று

பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் இன்று

Published on

மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் இன்று (19) இடம்பெறவுள்ளன.

இன்று பிற்பகல் 2 மணியளவில் பாலித தெவரப்பெரும உயிருடன் இருக்கும் போது தானே தயார் செய்த மயானத்தில் பூதவுடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

17ஆம் திகதி இரவு அவரின் இல்லத்திற்கு சடலம் கொண்டுவரப்பட்டதுடன், நேற்று இரவும் கூட பெருமளவான மக்கள் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

பாலித தெவரப்பெரும கடந்த 16ஆம் திகதி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததுடன் அப்போது அவருக்கு வயது 64.

2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராகவும், உள்நாட்டலுவல்கள், வடமேற்கு அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சராகவும் மற்றும் வனவிலங்கு பிரதி அமைச்சராகவும் பணியாற்றினார்.

மக்கள் கஷ்டப்படும் போது, பெரும் சமூகப் பணியை ஆற்றிய அரசியல்வாதியாக பாலித தெவரப்பெரும சமூகத்தில் முக்கிய இடம் பிடித்தவர்.

LATEST NEWS

MORE ARTICLES

அரச துறையில் ஊழலைத் தடுக்க புதிய வேலைத் திட்டம்

ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க...

ஷொப்பிங் பைகளின் விலை நிர்ணயம் தொடர்பில் அவதானம்

வர்த்தக நிலையங்களில் வழங்கப்படும் ஷொப்பிங் பைகளின் விலை நிர்ணயம் தொடர்பில் சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி...

உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்

மாகாண சபை தேர்தல் நடத்தப்படுவதற்காக நிலவும் சட்டம் கட்டாயமாக திருத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாகாண சபைத்...