follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉலகம்கப்பல் மோதி விபத்திற்குள்ளான பாலம் வெடி வைத்து தகர்ப்பு

கப்பல் மோதி விபத்திற்குள்ளான பாலம் வெடி வைத்து தகர்ப்பு

Published on

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் கன்டெய்னர் கப்பல் மோதியதில் சேதமடைந்த பாலம் வெடிவைத்து முழுமையாக தகா்க்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மாா்ச் மாதம் இலங்கையை நோக்கி வரவிருந்த டாலி என்ற சரக்குக் கப்பல் எதிா்பாராத விதமாக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தில் மோதிய போது, பாலத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தது.

இந்த விபத்தில் 8 பேரில் இருவர் மாத்திரமே உயிருடன் மீட்கப்பட்டதுடன், பாலத்தின் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த பாலத்தின் இடிபாடுகளை அகற்றி, எஞ்சிய பகுதிகளை வெடி வைத்து தகர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...

புதிய பாப்பரசர் தெரிவு – 2வது தடவையாகவும் வெளியேறியது கரும்புகை

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான 2ஆவது தடவை வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள்...

முதல் கட்ட வாக்கெடுப்பில் புதிய பாப்பரசர் தேர்வாகவில்லை – கரும்புகை வெளியேற்றம்

புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள் குழுவினர் மாநாடு வத்திக்கானில் புதன்கிழமை (07) ஆரம்பமானது. முதல்சுற்று வாக்குப் பதிவுக்குப் பின்னர்...