follow the truth

follow the truth

June, 18, 2025
HomeTOP1சுகாதார தொழிற்சங்க வேலைநிறுத்தம் தென் மாகாணத்தில்

சுகாதார தொழிற்சங்க வேலைநிறுத்தம் தென் மாகாணத்தில்

Published on

மாகாண மட்டத்தில் உள்ள தாதியர்கள் உட்பட சுகாதாரத்துறையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (16) தென் மாகாணத்தில் அமுல்படுத்தப்படுகிறது.

அதன்படி இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை தென் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த இணைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

சீருடை கொடுப்பனவுடன் ஒப்பிடும் போது ஏனைய குழுக்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்படாமை மற்றும் குறிப்பிட்ட கொடுப்பனவை அதிகரிப்பதற்கான சுற்றறிக்கையை வெளியிடும் போது 15 குழுக்கள் புறக்கணிக்கப்பட்டமையினால் இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, வடமத்திய மாகாணத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை முதல் சுகாதாரத் துறையில் உள்ள 72 தொழிற்சங்கங்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கெஹெலிய மனைவி மற்றும் மகள் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால்...

ஐ.ம.சக்தியின் சுசில் குமாரவின் உறுப்புரிமை இடைநிறுத்தம்

கொலன்னாவ நகரசபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட நாரஹேன்பிகே சுசில் குமார...

பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம்

பூஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள 5 கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம் நடத்தி வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  பொலிஸ் விசேட...