follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP2"அடுத்த தேர்தலுக்கு சிலிண்டர் சின்னம் கிடைக்குமா என்று பரிசீலிக்கிறோம்"

“அடுத்த தேர்தலுக்கு சிலிண்டர் சின்னம் கிடைக்குமா என்று பரிசீலிக்கிறோம்”

Published on

எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது நாளை மறுதினம் அறிவிக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டமொன்று கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.

அங்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தை மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் பதவி தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சிக்கு வழங்கப்பட்ட சிலிண்டர் சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு சந்தர்ப்பம் வழங்குமா என கேட்பதாகவும், அது கிடைத்தால் அந்த அடையாளத்துடன் தொடர்வதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தற்போது வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது என்றும் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விலகுவது என்பது அவ்வளவு எளிதல்ல – விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். சில நாட்களாகவே விராட்...

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது. இதுகுறித்து விளையாட்டு...

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...