follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP1கொழும்புக்கான விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்புக்கான விசேட போக்குவரத்து திட்டம்

Published on

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கப்படவுள்ள நிலையில், நாரஹேன்பிட்டி மாவட்டச் செயலகத்தைச் சுற்றி விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன்படி இன்று (11) காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாரஹேன்பிட்டி சந்தியில் இருந்து பார்க் வீதி சந்தி வரையிலான பேஸ்லைன் வீதி, கொழும்பில் இருந்து கிருலப்பனை நோக்கி செல்லும் இடது பாதை இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

இதே வீதியின் மற்றுமொரு பாதையான பார்க் வீதி சந்தியிலிருந்து நாரஹேன்பிட்டி சந்தி வரையான பொரளையை நோக்கிய நுழைவுப் பாதையானது இருபுறமும் வாகனங்கள் செல்லும் வகையில் அமுல்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும்...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்

2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்றைய தினம் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. உலக...