follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை பாவிப்போர் கவனத்திற்கு

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை பாவிப்போர் கவனத்திற்கு

Published on

சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களின் பாவனை நரம்புகளைப் பாதிக்கும் நோய்களை ஏற்படுத்தும் என சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆனந்த ஜெயலால் தெரிவித்துள்ளார்.

கேள்விக்குரிய பெரும்பாலான கிரீம்கள் தரமற்றவையே இதற்குக் காரணம் என்று அவர் கூறினார்.

2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின்படி, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் திரவங்களில் இருக்கக்கூடிய பாதரசத்தின் அளவு ஒரு கிலோகிராம் இற்கு ஒரு மில்லிகிராம் ஆகும்.

எவ்வாறாயினும், சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களில் அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிக அளவு பாதரசம் இருப்பதாக வைத்தியர் ஆனந்த ஜெயலால் தெரிவித்துள்ளார்.

தோல் புற்றுநோயின் அதிகரிப்பு மற்றும் தோல் மெலிதல், இரத்த நாளங்களின் தோற்றம் ஆகியவற்றில் அதிகரிப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இதன் காரணமாக, உடனடியாக வெண்மையாக்கும் கிரீம்களில் இருந்து விலகி இருக்கவும் மருத்துவர் கேட்டுக் கொண்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...