follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1"மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வீட்டுப் பிரச்சினைக்கான நிறந்தர தீர்வு காணி உரிமையே"

“மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வீட்டுப் பிரச்சினைக்கான நிறந்தர தீர்வு காணி உரிமையே”

Published on

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வீட்டுப் பிரச்சினைக்கான நிறந்தர தீர்வு காணி உரிமையினை பெற்றுக் கொடுப்பதே என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவ பகுதியில் நேற்று (19) இடம் பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மக்கள் மத்தியில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“.. பெருந்தோட்ட மக்களுக்கான வீட்டுப் பிரச்சினை என்பது பொதுவான ஒன்றாகும். இதற்கான நிறந்தர தீர்வானது காணி உரித்தினை பெற்றுக்கொடுப்பதே ஆகும். எனவேதான் நான் அமைச்சுப் பதவியினை பொறுப்பேற்ற நாள் தொடக்கம் எமது மக்களுக்கான காணி உறுதியினை பெற்றுக்கொடுப்பதே நிறந்தர நோக்கமாக காணப்பட்டது.

பாராளுமன்றத்தில் 88 தடவை நான் பேசியிருக்கிறேன். அதில் 18 தடவைகள் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளேன். மிகுதியான 70 தடவைகள் மறைக்கப்பட்ட சமூகம் தொடர்பாக பேசியுள்ளேன்.

மலையகத்தை பொருத்த வரையில் வீட்டுத்திட்டத்தை விட காணிகளுக்கு மாத்திரமே நாம் முதலிடம் வழங்கப்பட வேண்டும். ஏனெனில் ஒரு தோட்டபகுதியில் நூறு குடும்பங்கள் இருந்தால் அந்த நூறு குடும்பங்களுக்கும் வீடுகள் கிடைக்காது. அரசாங்கம் மக்களை பொறுப்பேற்க வேண்டும் அவ்வாறு செய்தால் மாத்திரமே மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை காணமுடியும்..” என தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...