follow the truth

follow the truth

August, 11, 2025
HomeTOP1எல்பிட்டிய இடைத்தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்

எல்பிட்டிய இடைத்தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்

Published on

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்தத் தகுதி பெற்ற அரச ஊழியர்களில் 95 வீதத்திற்கும் அதிகமானோர் தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்தியுள்ளதாக காலி மாவட்டச் செயலாளர் டபிள்யூ.ஏ. தர்மசிறி கூறுகிறார்.

எல்பிட்டிய பிரதேச சபைக்கு தபால் மூல வாக்களிப்பதற்காக 1,576 அரச ஊழியர்கள் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக டபிள்யூ.ஏ. தர்மசிறி தெரிவித்தார்.

அவசர நிலை ஏற்பட்டால், அதைச் சமாளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன என்றார்.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்காக 600 அரச உத்தியோகத்தர்கள் மற்றும் 500 பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மாவட்டச் செயலாளர், வாக்குப்பெட்டிகள் நாளை (25) காலை விநியோகிக்கப்படும் எனவும் அறிவித்தார்.

வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகள் எண்ணப்படும் எனவும், இரவு 10.00 மணிக்குள் வாக்குகளின் பெறுபேறுகளை வெளியிட முடியும் எனவும் காலி மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஏ. தர்மசிறி தெரிவித்தார்.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நாளை (26) நடைபெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...