follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்

வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்

Published on

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் 95 வீத அரச அதிகாரிகள் தபால் மூல வாக்களிப்பை மேற்கொண்டுள்ளதாக காலி மாவட்ட செயலாளர் டபிள்யு.ஏ.தர்மசிறி தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபைக்கென 1576 அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்புக்கென கோரியிருந்தனர். இந்நிலையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திடீர் அனர்த்தம் ஏற்படுமாயின் அதற்கு முகம்கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் 600 அரச அதிகாரிகளும் 500 பொலிஸ் அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதற்கமைய வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் இன்று காலை ஆரம்பமாகவுள்ளதாக காலி மாவட்ட செயலாளர் டபிள்யு.ஏ.தர்மசிறி தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும் பாதாள உலக தலைவரிடமிருந்து தொலைபேசி மூலம்...

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...