follow the truth

follow the truth

June, 23, 2025
HomeTOP1வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்

வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்

Published on

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் 95 வீத அரச அதிகாரிகள் தபால் மூல வாக்களிப்பை மேற்கொண்டுள்ளதாக காலி மாவட்ட செயலாளர் டபிள்யு.ஏ.தர்மசிறி தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபைக்கென 1576 அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்புக்கென கோரியிருந்தனர். இந்நிலையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திடீர் அனர்த்தம் ஏற்படுமாயின் அதற்கு முகம்கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் 600 அரச அதிகாரிகளும் 500 பொலிஸ் அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதற்கமைய வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் இன்று காலை ஆரம்பமாகவுள்ளதாக காலி மாவட்ட செயலாளர் டபிள்யு.ஏ.தர்மசிறி தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை...

இஸ்ரேலில் உள்ள 5 இலங்கை தொழிலாளர்கள் நாடு திரும்ப கோரிக்கை

இஸ்ரேலில் தொழில்புரியும் 5 இலங்கைத் தொழிலாளர்கள் நாடு திரும்புவதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இதுவரையில்...

கோரிக்கைகளைத் தொடர்ந்து பாராளுமன்ற ஊழியர்களுக்கான உணவுக் கட்டணம் குறைப்பு

பாராளுமன்ற பணிக்குழாமினரின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. அந்த குழுவின் தலைவர்...