follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP2அறுகம்பேக்கு STF களமிறக்கப்பட்டது எப்படி என ரணிலின் விளக்கம்

அறுகம்பேக்கு STF களமிறக்கப்பட்டது எப்படி என ரணிலின் விளக்கம்

Published on

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போது தான் அறுகம்பே சம்பவம் தொடர்பில் முதன்முதலில் வெளிச்சத்திற்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு, மல் வீதியில் உள்ள தனது பிரச்சார அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர்களான டிரான் அலஸ், பிரசன்ன ரணதுங்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் முன்னிலையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“அந்த தாக்குதல் பற்றிய முதல் தகவல் எங்கள் காலத்தில் வந்தது. நானும் அறுகம்பே சென்றேன். அதிக கவனம் செலுத்தவே நானாக சென்றேன். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, நாங்கள் எங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்தோம். தூதரகங்களுக்கு தகவல் தெரிவித்தோம்.

ஆனால் தற்போதைய அரசாங்கம் செய்தது அமெரிக்காவின் எச்சரிக்கையைக் கண்டவுடன் பொலிஸாரையும் இராணுவத்தையும் அறுகம்பேக்கு அனுப்பியது. இதைக் கண்டு ஏனைய நாடுகள் அச்சமடைந்தன. அந்த பகுதிகளுக்கு நாம் STF ஐ அனுப்பியது போதைப்பொருள் கடத்தலை தடுக்க என்று வேறுபட்ட உத்தியை கையாண்டாகும்.. அதை வைத்தே ஆபத்து குறித்த தகவல்களை சேகரித்தேன்’’ என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...

விலகுவது என்பது அவ்வளவு எளிதல்ல – விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். சில நாட்களாகவே விராட்...