follow the truth

follow the truth

June, 1, 2025
HomeTOP1பிரியாணி சாப்பிட்ட சிறுமி மரணம்

பிரியாணி சாப்பிட்ட சிறுமி மரணம்

Published on

ஹோட்டலில் இருந்து வாங்கிய பிரியாணி உணவு பார்சலை சாப்பிட்டு ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழந்த சிறுமியின் மரணம் குறித்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஒவ்வாமையினை அடுத்து உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டதால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கிரியுல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட உணவுப் பொதியை அவர் சாப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வாமை காரணமாக தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிரியுல்ல, மத்தேபொல, ஹென்யாய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உணவுப் பொதியினை மேலும் மூவருடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார். ஆனால், அந்த உணவை சாப்பிட்டதும் சிறுமிக்கு மட்டும் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இறந்தவரின் சகோதரரால் இரண்டு பிரியாணி உணவுப் பொட்டலங்கள் கொள்வனவு செய்யப்பட்டு அவை வீட்டில் வைத்து உண்ணப்பட்டதாக கிரியுல்ல பொலிஸ் நிலையப் பரிசோதகர் ஜனக சமரகோன் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவில்லை என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

நாட்டின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்

இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் எஸ். தாகரியன் (Levan S. Dzhagaryan) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்...