follow the truth

follow the truth

May, 17, 2025
HomeTOP1பிரியாணி சாப்பிட்ட சிறுமி மரணம்

பிரியாணி சாப்பிட்ட சிறுமி மரணம்

Published on

ஹோட்டலில் இருந்து வாங்கிய பிரியாணி உணவு பார்சலை சாப்பிட்டு ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழந்த சிறுமியின் மரணம் குறித்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஒவ்வாமையினை அடுத்து உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டதால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கிரியுல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட உணவுப் பொதியை அவர் சாப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வாமை காரணமாக தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிரியுல்ல, மத்தேபொல, ஹென்யாய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உணவுப் பொதியினை மேலும் மூவருடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார். ஆனால், அந்த உணவை சாப்பிட்டதும் சிறுமிக்கு மட்டும் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இறந்தவரின் சகோதரரால் இரண்டு பிரியாணி உணவுப் பொட்டலங்கள் கொள்வனவு செய்யப்பட்டு அவை வீட்டில் வைத்து உண்ணப்பட்டதாக கிரியுல்ல பொலிஸ் நிலையப் பரிசோதகர் ஜனக சமரகோன் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மின்சார கட்டணம் 18.3 சதவீதத்தினால் உயர்வு?

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில் நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுப் பயன்பாட்டு...

பண்டாரவளை இ.போ.ச பேருந்துப் பணிப்புறக்கணிப்பு

பண்டாரவளை இ.போ.ச பேருந்துப் பணிப்புறக்கணிப்புப் பணிப்பாளர் ஒருவர் மீது குடிபோதையில் பயணி ஒருவர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இன்று...

இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு...