follow the truth

follow the truth

June, 23, 2025
HomeTOP1சர்வமத வணக்கஸ்தலங்களுக்கு இலவச சூரிய மின்கலம்

சர்வமத வணக்கஸ்தலங்களுக்கு இலவச சூரிய மின்கலம்

Published on

புதிய மறுமலர்ச்சி யுகத்திற்கான உதயத்துடன் மக்களை மையமாகக் கொண்ட வலுசக்தித் துறையாக வளர்ச்சியடையும் வலுசக்தி அமைச்சின் நெறிப்படுத்தலில், இந்திய அரசின் 17 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபையும் இணைந்து நாடளாவிய ரீதியில் பரந்து காணப்படும் சர்வமத வணக்கஸ்தலங்களை உள்ளடக்கியவாறு கூரையின் மீது நிர்மாணிக்கப்படும் இலவச சூரிய மின்கலத் தொகுதிக் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இக்கருத்திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் பரந்து காணப்படும் விகாரைகள், பிரிவேனாக்கள், தேவாலயங்கள், முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் இந்துக் கோயில்கள் போன்ற அனைத்து வணக்கஸ்தலங்களையும் உள்வாங்கிக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

முதலாவது கட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டாகும் போது 5,000 வணக்கஸ்தலங்களை உள்வாங்கிக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன், குறித்த வணக்கஸ்தலங்களின் கூரையின் மீது 5kW இயலளவு கொண்ட சூரிய மின்கலத்தொகுதி ஒன்று பொருத்தப்படும்.

அத்துடன், இதன்மூலம் வணக்கஸ்தலங்களின் மின்பட்டியலைக் குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், வணக்கஸ்தலத்தின் மின் பயன்பாட்டுக்குப் பின்னர் எஞ்சுகின்ற மின் அலகுகள் தேசிய மின்வலுக் கட்டமைப்பில் சேர்த்துக் கொள்ளப்படும்.

முதல் கட்டத்தின் கீழ் நிறுவப்படவுள்ள 5,000 சூரிய மின்கலத் தொகுதியில் மாதாந்தம் ஒரு மின்கலத்தொகுதி மூலம் 500 – 600 மின் அலகுகள் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் நிறுவப்படுகின்ற ஒட்டுமொத்த மின் இயலளவு இருபத்தைந்து மெகாவாற்று 25MW ஆகும். இங்கு 37 மில்லியன் மின் அலகுகள் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மின் அலகுகள் சுவட்டு எரிபொருளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுமாயின் வருடாந்தம் ஏறத்தாழ 2,650 மில்லியன் ரூபாய்கள் செலவாகும். அதற்கமைய, இப் பசுமை வலுசக்திக் கருத்திட்டம் (Green Energy Project) மூலம் ஆண்டுதோறும் எரிபொருளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான செலவில் குறிப்பிடத்தக்களவை குறைத்துக் கொள்ள முடியும்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாலைதீவு ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள், இலங்கை ஜனாதிபதி செயலகத்திற்கு கல்வி சார் விஜயம்

மாலைதீவு ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள், இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு கல்வி சார் விஜயம் மேற்கொண்டனர். அவர்கள் ஜூன் 27...

இலங்கை வந்தடைந்தார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கைக்கு வந்தடைந்தார். அவர் ஜூன் 26 வரை இலங்கைக்கான...

கொலன்னாவ வெள்ளக் கட்டுப்பாடு – நியமிக்கப்பட்ட குழுவுடன் கலந்துரையாடல்

கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளக் கட்டுப்பாடு தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு, பிரதமர் ஹரினி அமரசூரிய அலரிமாளிகையில் கூடியது. கொலன்னாவை...