follow the truth

follow the truth

August, 23, 2025
Homeஉலகம்கேரள கோயில் திருவிழா பட்டாசு விபத்தில் பலர் காயம்

கேரள கோயில் திருவிழா பட்டாசு விபத்தில் பலர் காயம்

Published on

கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் இந்திய நேரப்படி நேற்று (28) இரவு நடைபெற்ற கோயில் திருவிழாவில் மிக மோசமான பட்டாசு விபத்து ஏற்பட்டது.

இதில் 150க்கும் மேற்பட்டோர் காயமடிந்துள்ளதோடு, அவர்களில் எட்டு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுக்கடங்காத பட்டாசு வெடிப்புகளையும் கொழுந்துவிட்டு எரியும் தீயையும் காட்டும் காணொளிகள் இணையத்தில் வலம் வந்திருந்தன.

கேரளாவில் கொண்டாடப்படும் தெய்யம் விழாவின் தொடக்கமாக அஞ்சுதாம்புலம் வீரக்காவு அனுசரிக்கப்படுகிறது.

அந்தச் சடங்கின்போது இப்பட்டாசு விபத்து நிகழ்ந்ததாகக் கேரள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நள்ளிரவு நேரத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாகவும் அப்போது பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த கொட்டகைக்குள் தீமூட்டப்பட்ட பட்டாசு தவறுதலாக விழுந்திருக்கக்கூடும் என்றும் சம்பவத்தை நேரில் கண்டோர் கூறினகூறியுள்ளனர்.ர்.

அந்தக் கொட்டகைக்கு அருகில் பலர் நின்றுகொண்டிருந்ததாகவும் கூட்ட நெரிசலாக இருந்ததால் அவர்களால் அங்கிருந்து விரைவாகத் தப்பிச் செல்ல முடியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...