follow the truth

follow the truth

June, 24, 2025
Homeஉள்நாடுஉபுல் தரங்கவுக்கு எதிரான பிடியாணைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

உபுல் தரங்கவுக்கு எதிரான பிடியாணைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

Published on

ஆட்ட நிர்ணய வழக்கில் ஆஜராகாத இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்கவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு மாத்தளை மேல் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை மீளப்பெறுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு எதிர்காலத்தில் விசாரணைக்கு அழைக்கப்படும் போது மாத்தளை மேல் நீதிமன்றில் ஆஜராகவுள்ளதாக உபுல் தரங்க தனது சட்டத்தரணிகள் ஊடாக வழங்கிய உறுதிமொழியை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தம்மைக் கைது செய்து ஆஜர்படுத்துவதற்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை செல்லுபடியற்ற உத்தரவிடுமாறு கோரி தரங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை மாத்தளை உயர்நீதிமன்றம் அழைத்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முகமது லஃபர் தாஹிர் மற்றும் பி. குமரன் இரத்தினம் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘உலக முடிவு’ சுற்றுலா தலத்துக்கு செல்ல மேலும் 02 நடைபாதைகள்

நுவரெலியா மாவட்டத்தில் ஹோர்டன் சமவெளியில் அமைந்துள்ள 'உலக முடிவு' சுற்றுலா தலத்துக்கு செல்ல மேலும் இரண்டு நடைபாதைகளை அமைக்க...

119 அவசர அழைப்பு சேவை குறித்து பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 119 அவசர அழைப்பு சேவைக்கு வரும் அழைப்புகளில், உண்மையான அவசர முறைப்பாடுகளுக்கு பதிலாக, தவறான...

கடவத்தையில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

கடவத்தையில் உள்ள ஆடை விற்பனை கடையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவைகள்...