follow the truth

follow the truth

August, 23, 2025
Homeஉலகம்காற்று மாசுபாட்டினால் லாகூர் பாடசாலைகள் ஒரு வாரத்திற்கு பூட்டு

காற்று மாசுபாட்டினால் லாகூர் பாடசாலைகள் ஒரு வாரத்திற்கு பூட்டு

Published on

காற்று மாசுபாடு காரணமாக பாகிஸ்தானின் லாகூரில் உள்ள பாடசாலைகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்படி, ஒரு வார காலத்திற்கு பாடசாலைகளை மூடுவதற்கு பாகிஸ்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அலுவலகப் பணியாளர்களில் 50% பேர் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் சுகாதார அதிகாரிகள் மக்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த மாதம் முதல் பாடசாலை மாணவர்களின் வெளிப்புற நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளதுடன் பாடசாலை நேரமும் திருத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி, மோட்டார் ரிக்‌ஷாக்கள், ஃபில்டர்கள் இல்லாமல் பார்பிக்யூ வணிகங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமாக கருதப்படும் லாகூர், உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் இரண்டாவது முறையாக நேற்று (03) முதலிடம் பிடித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...