follow the truth

follow the truth

May, 14, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா"இன்று அனைத்து மதங்களையும் இனங்களையும் ஒன்றுபட்ட தேசியத்தில் ஒன்றிணைக்கும் பயணத்தை ஆரம்பித்துள்ளோம்"

“இன்று அனைத்து மதங்களையும் இனங்களையும் ஒன்றுபட்ட தேசியத்தில் ஒன்றிணைக்கும் பயணத்தை ஆரம்பித்துள்ளோம்”

Published on

ஜனரஞ்சக அரசியல் பாதையை உருவாக்குவதே தமது கட்சியின் நோக்கம் என சர்வஜன அதிகாரத்தின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு சர்சஜன அதிகாரம் புதிய பார்வையை கொண்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போதே திலித் ஜயவீர இதனைத் தெரிவித்தார்.

“.. இலங்கையில் மீண்டும் ஒரு நல்லதொரு அரசியலை உருவாக்குவதற்கான அரசியல் இயந்திரம் சர்வஜன அதிகாரமே. ஒரு நல்ல அரசியல் கட்சி, உங்களை நேசிக்கும் பாசமுள்ள அரசியல் கட்சியாக இதை உருவாக்குவோம்.

இந்த அதிகாரத்தின் ஊடாக முன்பு போல பிறருக்காக அரசியல் மேற்கொள்ளும் மனிதர்களுக்கான அரசியலையே நாம் உருவாக்க நினைக்கிறோம். சலுகைகளை அனுபவிக்கவோ அல்லது பிற நன்மைகளைப் பயன்படுத்தவோ அரசியல் செய்யவில்லை.உண்மையான மனிதாபிமான முகமும் அணுகுமுறையும் கொண்ட அரசியலாக, நமது அரசியல் இயக்கம் மிகக் குறுகிய காலத்தில் முதிர்ச்சியடைந்து இன்று உயிர்ப்புடன் இருக்கும் ஒரே அரசியல் கட்சி.

இன்று அனைத்து மதங்களையும் இனங்களையும் ஒன்றுபட்ட தேசியத்தில் ஒன்றிணைக்கும் பயணத்தை எம்மால் மேற்கொள்ள முடிந்துள்ளது.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...