follow the truth

follow the truth

June, 27, 2025
HomeTOP1"சட்டமானது செல்வாக்கு இல்லாமல் அனைவருக்கும் சமமாக பொருந்தும்" - பதில் பொலிஸ் மா அதிபர்

“சட்டமானது செல்வாக்கு இல்லாமல் அனைவருக்கும் சமமாக பொருந்தும்” – பதில் பொலிஸ் மா அதிபர்

Published on

அரசியல் செல்வாக்கு இன்றி சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அனைவருக்கும் ஒரே நேரத்தில் சட்டத்தை அமுல்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது என்றார்.

யாழ்.சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் புதிய கட்டிடம் நிர்மாணிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“.. தற்போதைய அரசாங்கம் சட்டத்தின் கீழ் அனைவரும் சமமாக நடத்த வேண்டும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அனைத்து அதிகாரிகளுக்கும் அதையே தெரிவித்துள்ளேன். தேர்தலுக்குப் பிறகு மிகவும் விரும்பத்தகாத காலம் தேர்தலுக்கு பிந்தைய காலம். ஆனால், கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு, இலங்கையில் புதிய கலாச்சாரம் ஒன்றும் நடக்கவில்லை என்று நான் நினைக்கிறேன் , அதைச் சரியாகச் செயல்படுத்த முடிந்திருக்கிறது. சட்டத்தை அமுல்படுத்த முடியாவிட்டால் அது நமது பலவீனம். இது சட்ட அமுலாக்க அமைப்பின் பலவீனம், தலைவர்களின் பலவீனம். எனவே, சட்டத்தை அமுல்படுத்துவதில் எந்தவித பாதிப்பும் இல்லாத நல்ல சூழல் கிடைத்துள்ளது’’ என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“ஒரே பாலின திருமணம் சட்டபூர்வமாக்கப்படும் என்று நம்புகிறேன்” – வோல்கர் டர்க்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்...

கெஹெலிய வழக்கில் சாட்சியாளராக முன்னாள் ஜனாதிபதி

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கில் முன்னாள்...

கொழும்பு பங்குச் சந்தைகள் உயர்வு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (26) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு...