follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP1"அநுர குமார திஸாநாயக்கவின் சித்தாந்தத்திற்கு ஏற்ற பாராளுமன்றம் உருவாக்கப்படும்"

“அநுர குமார திஸாநாயக்கவின் சித்தாந்தத்திற்கு ஏற்ற பாராளுமன்றம் உருவாக்கப்படும்”

Published on

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் சித்தாந்தத்திற்கு ஏற்ற பாராளுமன்றம் இந்த பொதுத் தேர்தலில் உருவாக்கப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிரதிநிதித்துவப்படுத்தும் சித்தாந்தத்துக்கும் அரசியல் மாற்றத்துக்கும் பொருத்தமானவர்கள் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தை உருவாக்க வேண்டும்.

நாட்டுக்கு பொருத்தமான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து புதிய அரசாங்கத்தில் அதன் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மக்கள் குழுவொன்று தேவையெனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், எங்களின் நாடாளுமன்ற வெற்றி எண்ணிக்கையில் மட்டுமல்ல, தரத்திலும் உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

திருடர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதன் மூலம் நாட்டில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை நினைவுபடுத்தும் போது இதுவரையில் இருந்த அருவருப்பான கருத்தை மக்களாலேயே மாற்ற முடியும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...