follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1"அநுர குமார திஸாநாயக்கவின் சித்தாந்தத்திற்கு ஏற்ற பாராளுமன்றம் உருவாக்கப்படும்"

“அநுர குமார திஸாநாயக்கவின் சித்தாந்தத்திற்கு ஏற்ற பாராளுமன்றம் உருவாக்கப்படும்”

Published on

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் சித்தாந்தத்திற்கு ஏற்ற பாராளுமன்றம் இந்த பொதுத் தேர்தலில் உருவாக்கப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிரதிநிதித்துவப்படுத்தும் சித்தாந்தத்துக்கும் அரசியல் மாற்றத்துக்கும் பொருத்தமானவர்கள் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தை உருவாக்க வேண்டும்.

நாட்டுக்கு பொருத்தமான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து புதிய அரசாங்கத்தில் அதன் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மக்கள் குழுவொன்று தேவையெனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், எங்களின் நாடாளுமன்ற வெற்றி எண்ணிக்கையில் மட்டுமல்ல, தரத்திலும் உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

திருடர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதன் மூலம் நாட்டில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை நினைவுபடுத்தும் போது இதுவரையில் இருந்த அருவருப்பான கருத்தை மக்களாலேயே மாற்ற முடியும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...