follow the truth

follow the truth

June, 27, 2025
HomeTOP1மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி அறிவுறுத்தல்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி அறிவுறுத்தல்

Published on

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹெர முதல் ரம்புக்கன வரையான பகுதியின் நிர்மாணப் பணிகளை அடுத்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொதுஹெர முதல் ரம்புக்கனை வரையான மூன்றாவது பிரிவின் நிர்மாணப் பணிகளை பார்வையிடச் சென்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விஜித ஹேரத், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

இந்த வீதியின் விசேட தேவையை வலியுறுத்திய அமைச்சர் மூன்றாம் கட்டத்தை முறையாகப் பூர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை தெரிவித்துள்ளார். தற்போது அமைச்சரும் தலையிட்டு இயன்றவரை தடைகளை குறைத்து கட்டுமான பணிகளை முடிக்க தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

இத்திட்டம் 4.7.2023 இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பொத்துஹெர தொடக்கம் கலகெதர வரையிலான முழுத் திட்டத்திற்கான மதிப்பீடு 210 பில்லியன் ரூபாவாகும். பொத்துஹெரவிலிருந்து கலகெதர வரையிலான இந்த 4 வழிப்பாதையின் தூரம் 32.4 கி.மீ.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் டி. பாஸ்கரன், இயக்குநர் ஜெனரல் எஸ்.எம்.பி. சூரியபண்டார, திட்டப் பணிப்பாளர் அனுராதா ஹெட்டியாராச்சி மற்றும் அதிகாரிகள் குழுவும் இந்த கண்காணிப்பு பயணத்தில் இணைந்து கொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

150 ஓட்டங்களை கடந்த பெத்தும் நிஸ்ஸங்க

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று...

இலங்கையின் தேயிலை இறக்குமதியை மேம்படுத்த ஈரான் தயார்

மத்திய கிழக்கு நெருக்கடியை தொடர்ந்து இலங்கையுடனான வர்த்தக உறவுகளை, விசேடமாக தேயிலை இறக்குமதியை மேம்படுத்த தயாராக இருப்பதாக ஈரான்...

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கையர்களுக்கும் வெளிநாட்டு பயணிகளுக்கும் எச்சரிக்கை

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், இலங்கையர்கள் மற்றும் பிற வெளிநாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, தங்கள் குழந்தைக்கு...