follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP1மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி அறிவுறுத்தல்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி அறிவுறுத்தல்

Published on

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹெர முதல் ரம்புக்கன வரையான பகுதியின் நிர்மாணப் பணிகளை அடுத்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொதுஹெர முதல் ரம்புக்கனை வரையான மூன்றாவது பிரிவின் நிர்மாணப் பணிகளை பார்வையிடச் சென்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விஜித ஹேரத், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

இந்த வீதியின் விசேட தேவையை வலியுறுத்திய அமைச்சர் மூன்றாம் கட்டத்தை முறையாகப் பூர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை தெரிவித்துள்ளார். தற்போது அமைச்சரும் தலையிட்டு இயன்றவரை தடைகளை குறைத்து கட்டுமான பணிகளை முடிக்க தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

இத்திட்டம் 4.7.2023 இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பொத்துஹெர தொடக்கம் கலகெதர வரையிலான முழுத் திட்டத்திற்கான மதிப்பீடு 210 பில்லியன் ரூபாவாகும். பொத்துஹெரவிலிருந்து கலகெதர வரையிலான இந்த 4 வழிப்பாதையின் தூரம் 32.4 கி.மீ.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் டி. பாஸ்கரன், இயக்குநர் ஜெனரல் எஸ்.எம்.பி. சூரியபண்டார, திட்டப் பணிப்பாளர் அனுராதா ஹெட்டியாராச்சி மற்றும் அதிகாரிகள் குழுவும் இந்த கண்காணிப்பு பயணத்தில் இணைந்து கொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...