follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி அறிவுறுத்தல்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி அறிவுறுத்தல்

Published on

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹெர முதல் ரம்புக்கன வரையான பகுதியின் நிர்மாணப் பணிகளை அடுத்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொதுஹெர முதல் ரம்புக்கனை வரையான மூன்றாவது பிரிவின் நிர்மாணப் பணிகளை பார்வையிடச் சென்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விஜித ஹேரத், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

இந்த வீதியின் விசேட தேவையை வலியுறுத்திய அமைச்சர் மூன்றாம் கட்டத்தை முறையாகப் பூர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை தெரிவித்துள்ளார். தற்போது அமைச்சரும் தலையிட்டு இயன்றவரை தடைகளை குறைத்து கட்டுமான பணிகளை முடிக்க தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

இத்திட்டம் 4.7.2023 இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பொத்துஹெர தொடக்கம் கலகெதர வரையிலான முழுத் திட்டத்திற்கான மதிப்பீடு 210 பில்லியன் ரூபாவாகும். பொத்துஹெரவிலிருந்து கலகெதர வரையிலான இந்த 4 வழிப்பாதையின் தூரம் 32.4 கி.மீ.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் டி. பாஸ்கரன், இயக்குநர் ஜெனரல் எஸ்.எம்.பி. சூரியபண்டார, திட்டப் பணிப்பாளர் அனுராதா ஹெட்டியாராச்சி மற்றும் அதிகாரிகள் குழுவும் இந்த கண்காணிப்பு பயணத்தில் இணைந்து கொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...