follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1சிறுவர்களிடையே மீண்டும் தலைதூக்கும் வைரஸ் காய்ச்சல்

சிறுவர்களிடையே மீண்டும் தலைதூக்கும் வைரஸ் காய்ச்சல்

Published on

இந்த நாட்களில் சிறுவர்களுக்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவிக்கின்றார்.

இந்த காய்ச்சல் ஏறக்குறைய மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

“.. கடந்த சில நாட்களாக, சிறுவர்களுக்கு காய்ச்சல் அதிகரித்து வருவதை நான் அவதானித்தேன். வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளது. இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல். அதுமட்டுமின்றி டெங்கு பாதிப்பும் அதிகரித்து வருவதைக் கண்டோம். குறிப்பாக டெங்கு குறித்து அவதானமாக இருக்க வேண்டும். டெங்கு கொடியது என்பதால், 0.1% வீதமானவர்கள் உயிரிழக்கலாம். எனவே வீடு, பாடசாலை உள்ளிட்ட இடங்களை சுத்தமாக வைத்திருக்கவும்.”

“சிறுவர்களிடையே வைரஸ் காய்ச்சலைப் பார்க்கிறோம். இது இன்ஃபுளுவென்சா வைரசால் உண்டாகலாம். இது இன்ஃபுளுவென்சா காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வேறொரு வைரஸ் காய்ச்சலாகவும் இருக்கலாம். எனவே இருமல், சளி, காய்ச்சல், உடல்வலி, வாந்தி இருந்தால் இது வைரஸ் காய்ச்சல். மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், உரிய இரத்தப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...