follow the truth

follow the truth

May, 5, 2025
Homeவிளையாட்டுஇலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பயிற்சியாளர் நியமிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பயிற்சியாளர் நியமிப்பு

Published on

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் திறமையான துடுப்பாட்ட வீரரான நீல் மெக்கன்சி இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பயிற்றுவிப்பாளராக குறுகிய காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி அவர் இலங்கை அணியின் பல வீரர்களுடன் இணைந்து பணியாற்றப் போவதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

எனவே இலங்கை அணியின் வீரர்கள் பலர் போட்டிக்கு முந்தைய பயிற்சிக்காக நேற்றிரவு (11) தென்னாபிரிக்கா நோக்கி புறப்பட்டனர்.

தனஞ்சய டி சில்வா, திமுத் கருணாரத்ன, ஏஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், லஹிரு குமார, பிரபாத் ஜயசூரிய, நிஷான் பீரிஸ், மிலன் ரத்நாயக்க, கசுன் ராஜித மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோர் இதில் அடங்குவர்.

தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நவம்பர் 27ஆம் திகதி டர்பனில் தொடங்கவுள்ளது, இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 5ஆம் திகதி தொடங்குகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் அணி

பங்களாதேஷ் ஆண்கள் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்...

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...