follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுஇலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பயிற்சியாளர் நியமிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பயிற்சியாளர் நியமிப்பு

Published on

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் திறமையான துடுப்பாட்ட வீரரான நீல் மெக்கன்சி இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பயிற்றுவிப்பாளராக குறுகிய காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி அவர் இலங்கை அணியின் பல வீரர்களுடன் இணைந்து பணியாற்றப் போவதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

எனவே இலங்கை அணியின் வீரர்கள் பலர் போட்டிக்கு முந்தைய பயிற்சிக்காக நேற்றிரவு (11) தென்னாபிரிக்கா நோக்கி புறப்பட்டனர்.

தனஞ்சய டி சில்வா, திமுத் கருணாரத்ன, ஏஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், லஹிரு குமார, பிரபாத் ஜயசூரிய, நிஷான் பீரிஸ், மிலன் ரத்நாயக்க, கசுன் ராஜித மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோர் இதில் அடங்குவர்.

தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நவம்பர் 27ஆம் திகதி டர்பனில் தொடங்கவுள்ளது, இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 5ஆம் திகதி தொடங்குகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...

2026 உலகக்கிண்ண கால்பந்து – நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகும் மெக்சிகோவின் மைதானம்

மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கிண்ண போட்டிக்காக நவீனப்படுத்தப்பட்டு 2026 மார்ச் 26, அன்று...