follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1தெஹிவளை கால்வாயில் சாயம் ஊற்றிய நபருக்கு 25,000 ரூபா அபராதம்

தெஹிவளை கால்வாயில் சாயம் ஊற்றிய நபருக்கு 25,000 ரூபா அபராதம்

Published on

தெஹிவளை, கௌடான பிரதேசத்தில் இருந்து அத்திடிய குளம் ஊடாக கட்டு கால்வாய்க்கு செல்லும் கால்வாயில் சிவப்பு சாயத்தினை கலந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அது தொடர்பான சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை பிரதேசத்திலுள்ள தொழிற்சாலையில் சிவப்பு சாயம் கலந்த கொள்கலனை அகற்றுமாறு சந்தேகநபரிடம் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சம்பந்தப்பட்ட கொள்கலனை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று வைத்துள்ளார்.

அதன் பின்னர் சந்தேகநபர் அதனை கால்வாயில் விடுவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கால்வாயில் கிட்டத்தட்ட மூன்று நாட்களாக தண்ணீர் சிவப்பு நிறமாக மாறியதாக கூறப்படுகிறது. பிரதேசவாசிகள் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன் பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ​​சந்தேகநபருக்கு 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், நீதவான் அவரை கடுமையாக எச்சரித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள்...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக,...