follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1தெஹிவளை கால்வாயில் சாயம் ஊற்றிய நபருக்கு 25,000 ரூபா அபராதம்

தெஹிவளை கால்வாயில் சாயம் ஊற்றிய நபருக்கு 25,000 ரூபா அபராதம்

Published on

தெஹிவளை, கௌடான பிரதேசத்தில் இருந்து அத்திடிய குளம் ஊடாக கட்டு கால்வாய்க்கு செல்லும் கால்வாயில் சிவப்பு சாயத்தினை கலந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அது தொடர்பான சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை பிரதேசத்திலுள்ள தொழிற்சாலையில் சிவப்பு சாயம் கலந்த கொள்கலனை அகற்றுமாறு சந்தேகநபரிடம் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சம்பந்தப்பட்ட கொள்கலனை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று வைத்துள்ளார்.

அதன் பின்னர் சந்தேகநபர் அதனை கால்வாயில் விடுவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கால்வாயில் கிட்டத்தட்ட மூன்று நாட்களாக தண்ணீர் சிவப்பு நிறமாக மாறியதாக கூறப்படுகிறது. பிரதேசவாசிகள் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன் பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ​​சந்தேகநபருக்கு 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், நீதவான் அவரை கடுமையாக எச்சரித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...