follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1தேர்தல் உத்தியோகத்தர்களுக்கு இன்று ஒத்திகை

தேர்தல் உத்தியோகத்தர்களுக்கு இன்று ஒத்திகை

Published on

பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் அனைத்து எழுது பொருட்களும் இன்றைய (13) நாள் முழுவதும் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இந்த நடவடிக்கைகள் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

நாளை இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக 13,314 வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்பட வேண்டிய அனைத்து அலுவலர்கள் மற்றும் வாக்குப்பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் மற்றும் அனைத்து எழுது பொருட்களும் இன்று நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 49 வளாகங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

22 தொகுதிகளுடன் தொடர்புடைய 25 மாவட்டச் செயலகங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்று காலை 7 மணி முதல் பணிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பணிபுரியும் ஊழியர்களுக்காக ஒத்திகை ஒன்றும் நடத்தப்படும்.

பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் சுமார் 64,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இம்முறை தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக சுமார் 6000 பிரதிநிதிகள் அடங்கிய குழுவை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...