follow the truth

follow the truth

August, 24, 2025
Homeவிளையாட்டுமுஹமது நபி ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

முஹமது நபி ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

Published on

ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் முஹமது நபி ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அது பங்களாதேஷ் அணியுடனான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் பின்னராகும்.

அதன்படி, 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

கடந்த ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யோசித்து வருவதாக முஹமது நபி குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அவரது அணி சாம்பியன்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றதையடுத்து, தொடர்புடைய முடிவு மாற்றப்பட்டுள்ளது.

நபி ஆப்கானிஸ்தான் அணிக்காக 167 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 3600 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இதில் இரண்டு சதங்களும் 17 அரைசதங்களும் அடங்கும்.

பந்துவீச்சில் முகமது நபி 172 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஒரு நாள் சகலதுறை வீரர்களின் தரவரிசையிலும் அவர் முதல் இடத்தில் இருப்பது சிறப்பு.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர்...