follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1நாட்டை டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றுவதற்கான முதல் தொடக்கம் இன்று ஆரம்பம்

நாட்டை டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றுவதற்கான முதல் தொடக்கம் இன்று ஆரம்பம்

Published on

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்ட தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் (ICTA) பணிப்பாளர் சபை இன்று பிற்பகல் முதல் தடவையாக கூடவுள்ளது.

டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பிரதம ஜனாதிபதி ஆலோசகராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட கலாநிதி ஹன்ஸ் விஜயசூரிய, அதன் நிறைவேற்று அதிகாரமற்ற தலைவராக பணியாற்றுகிறார்.

பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல், தேசிய போட்டித்தன்மை மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் எதிர்பார்ப்புடன், பிராந்தியத்தில் மிகவும் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு இணையாக இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

சஞ்சய் கருணாசேன, ஹர்ஷ புரசிங்க, சந்திமா குரே, பந்துல ரணதுங்க, ஜெஃப்ரி சல்பர், சமிச அபேசிங்க, ஷனக ரெபெல் ஆகியோர் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகமையின் (ICTA) பணிப்பாளர் சபையின் ஏனைய உறுப்பினர்களாவர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள்...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக,...