follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ராஜகிரியில் போக்குவரத்து நெரிசலால் ஆயிரக்கணக்கானோர் சிரமம்

ராஜகிரியில் போக்குவரத்து நெரிசலால் ஆயிரக்கணக்கானோர் சிரமம்

Published on

ராஜகிரிய சந்தி பகுதியில் (மேம்பாலத்திற்கு அருகில்) தினமும் காலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அலுவலக ஊழியர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

சில காலமாக நிலவி வரும் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படவில்லை என தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ராஜகிரிய பிரதான வீதிக்கு நாவல மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருந்து (இரண்டாம் வீதிகள் ஊடாக) பிரவேசிக்கும் மக்கள், குறிப்பாக காலை வேளைகளில் அதிக வாகன நெரிசல் காரணமாக மணிக்கணக்கில் அலைய வேண்டியுள்ளது என ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பாராளுமன்றம் உட்பட பல அரச நிறுவனங்கள் அருகாமையில் அமைந்துள்ளதால் ஆயிரக்கணக்கான அலுவலக ஊழியர்கள் பக்க வீதிகளில் இருந்து ராஜகிரிய பிரதான வீதிக்குள் பிரவேசிப்பதாகவும் கூறப்படுகிறது.

மேம்பாலம் இருந்தும் இப்பகுதியில் சில காலமாக நெரிசல் நீடிப்பதால், இப்பிரச்சினைக்கு அரசும், காவல்துறை உயரதிகாரிகளும் உடனடி தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது தொடர்பில் பொலிஸ் போக்குவரத்து தலைமையகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொடவிடம் நாம் வினவிய போது, ​​அந்த பகுதியில் காலை வேளையில் வாகன நெரிசல் காணப்பட்டதை ஒப்புக்கொள்கின்றேன்.

போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்துள்ளதாகவும் தேர்தலின் பின்னர் அந்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் கடமைகள் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்களை போதியளவு போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்த முடியவில்லை எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...