follow the truth

follow the truth

June, 30, 2025
HomeTOP1லொஹான் ரத்வத்த தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய கால அவகாசம்

லொஹான் ரத்வத்த தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய கால அவகாசம்

Published on

மிரிஹான பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பதிவு செய்யப்படாத வாகனம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த தாக்கல் செய்த பிணை மனுவுக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (19) சட்டமா அதிபருக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. 

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரத்ன, நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நான்கு வார கால அவகாசம் கோரினார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்ன அந்தக் கோரிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்ததுடன், அதற்கான குறுகிய திகதியை வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார்.

இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிக்கு உத்தரவிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், மனுவை பரிசீலிக்க டிசம்பர் 9 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்: விசாரணை அறிக்கை அடுத்த வாரம்

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடைய விசாரணையை முன்னெடுத்துவரும் ஐந்து பேர் கொண்ட குழுவின்...

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்கள் மீட்பு

மூன்று கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய, சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் இரண்டு சொகுசு வாகனங்கள், பண்டாரகம...

மீன்பிடி விபத்துகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஒரு குழு

மீன்பிடி விபத்துகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஒரு குழுவை நியமிக்குமாறு மீன்வளத்துறை பணிப்பாளர் ஜெனரல் சுசந்தா கஹவத்தேவுக்கு மீன்வளத்துறை...