follow the truth

follow the truth

April, 30, 2025
Homeஉள்நாடுஅரிசி விற்பனைக்கு சதோசவும் கட்டுப்பாடுகளை விதித்தது

அரிசி விற்பனைக்கு சதோசவும் கட்டுப்பாடுகளை விதித்தது

Published on

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இலங்கை சதொச நிறுவனமும் அரிசியை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, சதொச ஒரு வாடிக்கையாளருக்கு பத்து கிலோ நாட்டு அரிசி மற்றும் கெக்குலு அரிசியை மட்டுமே வழங்குகின்றது.

இதற்கிடையில், பிரபல சுப்பர் மார்கட் ஒன்றில், ஒரு வகை அரிசியானது ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் மூன்று கிலோ மட்டுமே வழங்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்தினால் அண்மையில் அரிசி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டது.

இதன்படி சம்பா மற்றும் நாட்டு அரிசி கிலோ விலை 90 ரூபாவாகவும், கெக்குலு அரிசி கிலோ விலை 85 ரூபாவாகவும், கீரி சம்பா கிலோ விலை 125 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

இருந்த போதிலும், இந்த விலைக்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியை விற்பனை செய்ய முன்வராத படியினால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், தற்போதைய அரிசி தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...