follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகியது

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகியது

Published on

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகியது.

அதற்கு முன்னதாக செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் பரீட்சை நிலையங்களுக்குச் செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

குறித்த பரீட்சை அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரை 2,312 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 333,185 பரீட்ச்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

அவர்களில் 253,390 பாடசாலை பரீட்சார்த்திகளும் 79,793 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்குவதாகப் பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவராணி புனிதா தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைக்குத் தோற்றுவதற்கான உரிய நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து பரீட்சைகள் திணைக்களம் முன்னெடுத்துள்ளதாகத் திணைக்களத்தின் பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவராணி புனிதா தெரிவித்தார்.

இதேவேளை, உயர்தரப் பரீட்சையின் போது காலநிலையினால் ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் 117 என்ற துரித இலக்கத்திற்கோ அல்லது, பரீட்சைகள் திணைக்களத்தின் துரித இலக்கமான 1911 இற்கோ அழைக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...