follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1இன்று முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு

இன்று முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு

Published on

நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு இன்று முதல் மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

அதன்படி, முதலாம் இலக்க நாடாளுமன்ற குழு அறையில் முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 4.30வரை இந்த செயலமர்வை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல, பிரதி சபாநாயகர் கலாநிதி மொஹமட் ரிஸ்வி சாலி, பிரதிக் குழுக்களின் தலைவர் ஹேமாலி வீரசேகர, சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் குறித்த செயலமர்வின் ஆரம்பத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த மூன்று நாள் செயலமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கு, நாடாளுமன்ற சிறப்புரிமைகள், நாடாளுமன்றத்தில் சட்டமியற்றும் செயல்முறை, நாடாளுமன்றக் குழு செயல்முறை, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் அரசியலமைப்புச் சட்ட விதிகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலத்திரனியல் வாக்களிப்பு முறையின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிப்பதற்கான நடைமுறை அமர்வும் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுதவிர, நாடாளுமன்ற திணைக்களத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற பணியகங்களின் தலைவர்கள், நாடாளுமன்ற செயற்பாட்டில் உறுப்பினர்களின் பங்களிப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கவுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...