follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுNPP எம்பிக்களின் சம்பளம் தேசிய மக்கள் சக்தியின் பொது நிதிக்கு

NPP எம்பிக்களின் சம்பளம் தேசிய மக்கள் சக்தியின் பொது நிதிக்கு

Published on

தேசிய மக்கள் சக்தியினால் தெரிவு செய்யப்பட்ட 159 பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை தேசிய மக்கள் சக்தி பொது நிதியத்திற்கு வழங்குவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, அவர்களின் பாராளுமன்ற சம்பளம் அவர்களின் தனிப்பட்ட சம்பள கணக்கிலிருந்து பொது நிதிக்கு வரவு வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தம் வழங்கும் ஆவணத்தில் அனைத்து எம்.பி.க்களும் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியானது.

அந்த பொதுநிதியின் பணம் முழுநேர அரசியலில் ஈடுபடுபவர்களின் நலனுக்காகவும், சாதாரண மக்களின் நலனுக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது. ஜனதா விமுக்தி பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றம், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளமும் பொது நிதியில் வரவு வைக்கப்பட்டதுடன், தேசிய மக்கள் சக்தியிலும் அதே பாரம்பரியத்தை பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...