follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ஐஸ் போதைப்பொருள் 400 கிலோவுடன் பிடிபட்ட சந்தேகநபர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு

ஐஸ் போதைப்பொருள் 400 கிலோவுடன் பிடிபட்ட சந்தேகநபர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு

Published on

அண்மையில் இந்திய கடற்பரப்பில் ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற இரண்டு இலங்கை மீன்பிடி படகுகளும், அதில் இருந்த சந்தேக நபர்களும் இன்று (02) கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

இதற்காக இலங்கை கடற்படையின் கஜபாகு கப்பல் இணைந்துள்ளது.

இந்திய கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான உளவுத்துறை பரிமாற்றத்தின் பின்னர், குறித்த இரண்டு கப்பல்களையும் இந்திய கடற்படை கைப்பற்றியது.

அதில் ஒரு கப்பலில் சுமார் 400 கிலோ ஐஸ் போதைப்பொருள் இருந்ததாகவும், மற்றைய கப்பல் அதன் உதவிக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் அந்த பல நாள் படகுகளுடன் இலங்கை சந்தேக நபர்களை இந்திய கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு, பல நாள் மீன்பிடி படகுகள் மற்றும் சந்தேக நபர்களை இந்திய கடற்படையினர் கடந்த 29ம் திகதி இலங்கை கடற்படை கப்பலான கஜபாகுவிடம் ஒப்படைத்தனர்.

இதன்படி, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினர் ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு, பல நாள் பாய்மரக் கப்பல்கள் மற்றும் சந்தேக நபர்களை இன்று (02) தரையிறங்கச் செய்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...