follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP1அஸ்வெசும பயனாளிகளின் மானிய காலம் நீட்டிக்கப்படும்

அஸ்வெசும பயனாளிகளின் மானிய காலம் நீட்டிக்கப்படும்

Published on

இந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த 04 இலட்சம் பயனாளிகளின் நிவாரண உதவித்தொகையை அடுத்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன், டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த 04 இலட்சம் பாதிக்கப்படக்கூடிய பயனாளிகளின் கொடுப்பனவுகள் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

மேலும், எட்டு இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வந்த 8,500 ரூபா நிவாரணக் கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மிகவும் வறிய நிலையில் உள்ள நான்கு இலட்சம் மக்கள் பெற்றுக்கொண்ட 15,000 ரூபா கொடுப்பனவு 17,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....