follow the truth

follow the truth

January, 18, 2025
HomeTOP1அஸ்வெசும பயனாளிகளின் மானிய காலம் நீட்டிக்கப்படும்

அஸ்வெசும பயனாளிகளின் மானிய காலம் நீட்டிக்கப்படும்

Published on

இந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த 04 இலட்சம் பயனாளிகளின் நிவாரண உதவித்தொகையை அடுத்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன், டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த 04 இலட்சம் பாதிக்கப்படக்கூடிய பயனாளிகளின் கொடுப்பனவுகள் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

மேலும், எட்டு இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வந்த 8,500 ரூபா நிவாரணக் கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மிகவும் வறிய நிலையில் உள்ள நான்கு இலட்சம் மக்கள் பெற்றுக்கொண்ட 15,000 ரூபா கொடுப்பனவு 17,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆசன முன்பதிவு மற்றும் முன்பதிவுக் கட்டண மீளளிப்பு தொடர்பான அறிவித்தல்

புகையிரத ஆசன முன்பதிவின் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணைக் குறிப்பிட...

‘கிளீன் ஸ்ரீ லங்கா’ திட்டம் தொடர்பில் ஜனவரி 21 – 22 விவாதம்

பாராளுமன்றம் ஜனவரி 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம்...

நிதி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மின்கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படும்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு செயல்படுத்த திட்டமிடப்பட்ட புதிய மின்சார கட்டண திருத்தம் நிதி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு...