follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP2வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்தியாவில் 40 பாடசாலைகளுக்கு பூட்டு

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்தியாவில் 40 பாடசாலைகளுக்கு பூட்டு

Published on

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

நேற்று (08) இரவும் இன்று (09) காலையும் மின்னஞ்சல்கள் ஊடாக இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெல்லியில் உள்ள 44 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன் பிரகாரம் இந்திய பொலிஸார் இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் இன்று காலை பாடசாலைக்கு வந்த மாணவர்களை உடனடியாக அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக தீயணைப்பு வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவுகள் மற்றும் உத்தியோகபூர்வ நாய்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த அக்டோபரில், இந்தியாவில் உள்ள பல பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது, பின்னர் அவை தவறான எச்சரிக்கைகள் என்பது உறுதி செய்யப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட...

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள், இராணுவ...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ்...