follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1அதிக விலைக்கு அரிசி விற்கும் வியாபாரிகளை தேடி இன்று முதல் சுற்றிவளைப்பு

அதிக விலைக்கு அரிசி விற்கும் வியாபாரிகளை தேடி இன்று முதல் சுற்றிவளைப்பு

Published on

அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதிகபட்ச விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்கும் வகையில் இன்று (10) முதல் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (09) அரிசிக்கான அதிகபட்ச விலையை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார்.

புதிய அரிசி விலை அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், அதற்கு மேல் அரிசி விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

“.. வணிக சமூகம், உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தங்கள் அரிசியின் அளவை நாங்கள் பகிரங்கப்படுத்திய விலைக்கு ஏற்ப வாங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அரிசி விற்பனையில் ஏதேனும் முறையற்ற அல்லது அதிக விலை இருந்தால், அவர்கள் அதைப் பற்றி முறைப்பாடு செய்யலாம். நுகர்வோர் அதிகார சபையின் 1977 என்ற இலக்கத்திற்கு மாவட்ட அலுவலகங்கள் மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்யலாம்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...