follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பரேட் சட்டத்தினை இடைநிறுத்தத்தை நீட்டிக்க அரசாங்கம் தீர்மானம்

பரேட் சட்டத்தினை இடைநிறுத்தத்தை நீட்டிக்க அரசாங்கம் தீர்மானம்

Published on

பரேட் சட்டத்தின் இடைநிறுத்தத்தை 2025 மார்ச் 31 வரை நீட்டிக்க அரசாங்கம் தீர்மானம் செய்துள்ளது.

சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் கடனை செலுத்தத் தவறியதால், அவர்களின் சொத்துக்களை ஏலம் விடுவது இந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

கடந்த 04 வருடங்களில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியானது சிறிய மற்றும் நடுத்தர நிறுவனத் துறையை கடுமையாகப் பாதித்துள்ளதாகவும், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கிகளில் பெற்ற கடனைத் தீர்ப்பதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். .

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...