follow the truth

follow the truth

May, 4, 2025
HomeTOP2ஷாகிப் அல் ஹசனுக்கு தடை

ஷாகிப் அல் ஹசனுக்கு தடை

Published on

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷாகிப் அல்-ஹசன், சர்வதேச கிரிக்கெட் சபையால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கிரிக்கெட் சங்கங்களால் நடத்தப்படும் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அங்கு நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் ஷாகிப் பந்துவீச தடை விதித்தது.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டியில் அவர் பந்து வீசியதாக குற்றம் சாட்டப்பட்டது.

அதன்படி, ஷாகிப் தனது பந்துவீச்சை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இலங்கை டி10 தொடரில் இணைந்துள்ளார்.

கோல் மார்வெல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஷாகிப், கடந்த இரண்டு போட்டிகளிலும் பந்து வீசவில்லை.

டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஷாகிப் அல் ஹசன், இன்னும் ஒருநாள் போட்டிகளில் பங்களாதேஷை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்கள அதிகாரி கைது

1500 ரூபாவை கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால்...

டெங்கு, சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக மேல் மாகாண சுகாதார சேவைகள்...