follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2ஷாகிப் அல் ஹசனுக்கு தடை

ஷாகிப் அல் ஹசனுக்கு தடை

Published on

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷாகிப் அல்-ஹசன், சர்வதேச கிரிக்கெட் சபையால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கிரிக்கெட் சங்கங்களால் நடத்தப்படும் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அங்கு நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் ஷாகிப் பந்துவீச தடை விதித்தது.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டியில் அவர் பந்து வீசியதாக குற்றம் சாட்டப்பட்டது.

அதன்படி, ஷாகிப் தனது பந்துவீச்சை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இலங்கை டி10 தொடரில் இணைந்துள்ளார்.

கோல் மார்வெல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஷாகிப், கடந்த இரண்டு போட்டிகளிலும் பந்து வீசவில்லை.

டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஷாகிப் அல் ஹசன், இன்னும் ஒருநாள் போட்டிகளில் பங்களாதேஷை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...