follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2ஷாகிப் அல் ஹசனுக்கு தடை

ஷாகிப் அல் ஹசனுக்கு தடை

Published on

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷாகிப் அல்-ஹசன், சர்வதேச கிரிக்கெட் சபையால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கிரிக்கெட் சங்கங்களால் நடத்தப்படும் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அங்கு நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் ஷாகிப் பந்துவீச தடை விதித்தது.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டியில் அவர் பந்து வீசியதாக குற்றம் சாட்டப்பட்டது.

அதன்படி, ஷாகிப் தனது பந்துவீச்சை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இலங்கை டி10 தொடரில் இணைந்துள்ளார்.

கோல் மார்வெல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஷாகிப், கடந்த இரண்டு போட்டிகளிலும் பந்து வீசவில்லை.

டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஷாகிப் அல் ஹசன், இன்னும் ஒருநாள் போட்டிகளில் பங்களாதேஷை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...