follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுகட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக இன்று முதல் வழக்கு

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக இன்று முதல் வழக்கு

Published on

கொழும்பிற்கு வெளியே உள்ள ஏனைய மாவட்டங்களுக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசியை அதிகபட்ச சில்லறை விலையான 220 ரூபாவுக்கு விற்பனை செய்வது பிரச்சினையாக உள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

போக்குவரத்துச் செலவுகள் காரணமாகக் கொழும்பிற்கு வெளியே உள்ள பகுதிகளில் அரிசியை உரிய விலைக்கு விற்பனை செய்வது சில்லறை வியாபாரிகளுக்குச் சிரமமாக இருக்கும் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக இன்று முதல் வழக்குத் தொடரவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசியை விற்பனை செய்த 307 வர்த்தக நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வருடாந்தம் 10,000 – 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில்...

பாராளுமன்ற உறுப்பினராக நிஷாந்த ஜெயவீரவின் பெயர் வர்த்தமானியில்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினராக...

கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை...