follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉலகம்வடகொரியாவில் 11 நாட்களுக்கு மக்கள் சிரிப்பதற்கு தடை

வடகொரியாவில் 11 நாட்களுக்கு மக்கள் சிரிப்பதற்கு தடை

Published on

வடகொரியாவின் முன்னாள் ஜனாதிபதியான கிம் ஜாங் இல்லின் 10 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அந் நாட்டு குடிமக்கள் 11 நாட்களுக்கு சிரிப்பதற்கு, மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் திகதி உயிரிழந்ததால், தற்போது வடகொரியாவை Kim Jong Il-ன் மூன்றாவது மகன் ஆன, கிம் ஜாங் உன் மூன்றாவது தலைமுறையாக ஆண்டு வருகிறார்.

இந்நிலையில், வட கொரிய மக்கள் மது அருந்துவது, சிரிப்பது, மளிகை பொருட்கள் வாங்குவது அல்லது ஓய்வு நேர நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சினுய்ஜூவில் வசிக்கும் நபர் ஒருவர் ரேடியோ Radio Free Asia விடம் தெரிவித்துள்ளார்.

கிம் ஜோங் இல் இறந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் இதே நடைமுறை வடகொரியாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த துக்கம் 10 நாட்களுக்கு கடைபிடிக்கபடும். ஆனால் இது கிம் ஜோங் இல் இறந்து 10 – வது நினைவு ஆண்டு என்பதால் இந்த ஆண்டு 11 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

”Big Beautiful Bill” புதிய வரி சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க சுதந்திர...

கிரீஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

கிரீஸின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிரீட்டில், புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து...

ஸ்பெயினில் புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் தீ விபத்து

ஸ்பெயினில் உள்ள ஒரு விமான நிலையமொன்றில் புறப்படத்த தயாரக இருந்த ரியன் ஏர் என்ற விமானத்தில் ஏற்பட்ட தீ...