follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஹிக்கடுவையில் அதிக ஒலி எழுப்பலுக்கு வருகிறது தடை

ஹிக்கடுவையில் அதிக ஒலி எழுப்பலுக்கு வருகிறது தடை

Published on

ஹிக்கடுவையின் சுற்றுலா வர்த்தகத்தை பாதித்த நீண்ட தூர சேவை பஸ்கள் அதிக ஒலி எழுப்பி பயணிப்பது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நகரின் வழியாக செல்லக்கூடிய வேகத்தடை மணிக்கு 40 கி.மீ ஆக உயர்த்தப்பட்டு, அதிக ஒலி எழுப்பலை தடுக்கும் பலகைகள் பொருத்தப்பட்டு, அது குறித்து பேருந்து ஓட்டுநர்களுக்குத் தெரிவிக்கப்படும்.

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர ஹிக்கடுவ பிரதேசத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்த தீர்மானங்களை எட்டியுள்ளார்.

ஹிக்கடுவை சுற்றுலா நகரம் என்பதற்கான அடையாளங்களை சிங்கள மொழியிலும் தயார் செய்யுமாறு தென் மாகாண ஆளுநர் போக்குவரத்து பொலிஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ருஹுனு சுற்றுலா பணியகம் ஆகியவற்றுக்கு பணிப்புரை வழங்கியதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, ஹிக்கடுவ பிரதேசத்தில் கழிவு முகாமைத்துவத்தை முறையாக பேணுவது தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...